
ஆளில்லா வானவெளி...!
எங்கிருந்து வந்தோம்....?!
எங்கு செல்வோம்....?!
நம் கண்களுக்கு தெரியவில்லை.....!!
இங்கு காற்றில் மிதக்க வைத்தான்....!
தந்தையின் முதுகுத்தண்டில் புக வைத்தான்....!
கருவறை நோக்கிய பயணத்தில்.....!
கோடி போட்டியாளரில்
நம்மை முடிசூட வைத்தான்....!
அட்டை பூச்சி போல நாம்
ஒட்டியிருந்த காலத்தில் நாம் வசிக்க
கருவறை படைத்தான்...!
நம்மை இரத்த கட்டியாக்கினான்....!
பின் சதைக்கட்டியாகினான்.....!
பின் எலும்பு கொண்டு போற்றினான்...!
நம் தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து வேறுபட்ட போது,
செவிலி திரை கொண்டு நம்மை பாதுகாத்தான்....!
மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான.....!
நம் தாயின் பாலை நமக்கு
இனிப்புடன் உற்பத்தி செய்தான்....!
அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்....!
கோடையில் குளிர்சாதன பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்....!
இவையெல்லாம் நீ உலகை அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்....!
உனக்கு வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை என்கிறாயே..!
நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே இருக்கிறான்.
மனிதனே.......!
அந்த ஒருவனை மறந்துவிடாதே.....!
அவன் ஒருவன்....!
அவன் தனித்தவன்.......!
சேட்டிலைட்டுகள் செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து வைத்தவன..!!
விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!
விண்னை தூனில்லாமல் உயர்த்தியவன்...!
உலகை அடக்கி ஆள்பவன்....!
அவன் மகா தூயவன்.....!!
எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே......!!!
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!