தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

பொருட்காட்சியில் சில மணி நேரம்....

சென்னையில் படுஜோராக பொழுதை கழிக்க தமிழக அரசால் பொருட்காட்சி என்னும் நிகழ்ச்சியை கிட்டதட்ட ஓரிரு மாதங்களாக நடத்தி வெளியூர் வாழ் அனைத்து குடும்பத்தினர்களுக்கும் குடும்பத்துடன் கண்டுக்கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர் அதுமட்டுமல்ல இராட்சத ஊஞ்சல் என்று குட்டிஸ் மனதை கொள்ளைகொள்ளும் அழவிற்கு அசத்தியிள்ளனர் தமிழக அரசுக்கு முதலில் நம் நன்றிகலந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

வழக்கம்போல் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் இரயில், அறிவியல் அரங்கம் ஆகியவையும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

சரி நம்ம காட்சிக்கு வருவோம் நான் மற்றும் என்னுடன் சேர்ந்த நாவர் (நண்பர்கள்) மொத்தம் ஐவர் சேர்ந்து சென்றோம் உள்ளே நுழைந்தது வாசனையுடன் மிக அற்புதமான வரவேற்ப்பு (கூவம் தானுங்க) ஒரு மாதிரியாக முகத்தை சுழித்துக்கொண்டு உள்ளே சென்றோம். இரு சக்கர வாகனத்தில் நடுவே வழிமறித்து டிக்கெட் என்றார் கனத்த குரலுடன் எடுத்து பின் உள்ளே சென்றோம். 

நிரம்பி வழிந்த கூட்டங்கள் அனைத்து தரப்பினரும் வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பயன்பெறும் வகையில் நிறைய அங்காடிகள் அதில் பல இடங்களில் மின்னியது "டெல்லி அப்பளம்" ஒவ்வொருவரும் கையில் வைத்து குடும்பமே சுவைத்து அதற்கு போட்டி போட்டுக்கொண்டு ஆனந்தமாக கண்டுகளித்தது இதிலல்லவா சந்தோஷம் கோடானகோடி கொடுத்தாலும் இதற்கு ஈடாகாது.

மேலும் காட்சியகத்தில் ரிப்பன் பில்டிங், சென்ட்ரல் ரயில்வே நிலையம் மற்றும் சென்னையில் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் பழைமையான கட்டிடங்கள் ஓரிடத்தில் காண்பது புதுமை, ஆச்சி மார்க் கடையில் பெரும் கூட்டம் வாங்குவதற்கு சிலரே இருந்த நிலையில் பெரும்பாலனோர் ஓசியில் (புதியதாக) ருசித்து பார்த்த மீன்/இறால் ஊறுகாய் வகைகள்.

அறிவுக்குத் திறனான புத்தகங்கள் ஒரு பகுதியில் இடம்பெற்றிக்கலாம் சற்று வருத்தமே, சென்ற மாதங்களில்தான் சென்னையில் மிக பிரமாண்டமான புத்தக கண்காட்சி நிறையுற்றது குறிப்பிடத்தக்கது. 

பொருட்காட்சியை காண வரும் பொதுமக்களுக்காக நகரின் முக்கிய இடங்களில் இருந்து பொருட்காட்சிக்கு கூடுதலாக அரசு பேரு‌ந்துகள் இயக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரு‌ந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தவும் தேவையான வசதிகளைச் செய்துள்ளது தமிழக அரசு.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்