தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

அதிரை ஈத் மிலனில் பெருநாள் சந்திப்பு விழா அழைப்பு!

அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் வருகின்ற 20.10.2013 அன்று காலை 10 மணியளவில் லாவண்யா திருமண மண்டபத்தில் மாபெரும் பெருநாள் சந்திப்பு நடைபெற உள்ளது. 

இதில் நமதூருக்கு அருகில் உள்ள நமது தொப்புகொடி உறவுகளான இந்து , கிருத்துவ மக்கள் பெருவாரியாக கலந்துகொள்ள உள்ளார்கள்.

இந்நிகழ்வில் உரையாற்ற சென்னையிலிருந்து மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி மற்றும் சென்னை புது கல்லூரி பேராசிரியர் ஃபரித்அஸ்லம்  M.Sc,MPhil ,B.Ed உள்ளிட்ட பேச்சாளர்கள் பேச உள்ளார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக திருமிகு M செங்கமலச் செல்வன்(சிறப்பு நீதிபதி வன வழக்குகள் நீதிமன்றம் நாகர்கோயில்)

மற்றும் திருமிகு T பன்னீர் செல்வம் (குற்றவியல் நீதிபதி -மன்னார்குடி )ஆகியோர்  கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் .

இந்நிகழ்வுக்கு தலைமையாக ஜனாப் இப்ராஹிம் அன்சாரி அவர்களும் ,வரவேற்ப்புரை ஜனாப் ஜமீல் முகமது சாலிஹ் அவர்களும் முன்னிலை வக்கீல் ஜனாப்  முனாஃப் BA,BL (நோட்டரி பப்ளிக் & பிரமாண ஆணையர் ) அவர்களும் நன்றியுரை ஜனாப் முகமது இதிரீஸ் M.A MPhil, PGDCA (தலைவர் &விரிவுரையாளர் அரபி துறை கா, மு கல்லூரி )அவர்களும் நியமிக்க பட்டுள்ளனர் .

எனவே இந்த சமூக நல்லிணக்க விழாவில் தாங்களும் கலந்து கொள்வதுடன் தங்களுக்கு அறிமுகமான மாற்று மத அன்பர்களையும் அழைத்துவர கேட்டுகொள்கிறோம்.

குறிப்பு: கலந்துகொள்ளும் அனைவருக்கும் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிக்கு

அதிரை ஈத் மிலன் கமிட்டி.
அதிராம்பட்டினம் 
adiraieidmilan.blogspot.com

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்